உள்ளே வெளியே…
தமிழக மக்கள் இந்த கோமாளி அரசியல்வாதிகளிடளிருந்து எப்படி தப்பிக்க போகிறார்கள் என்ன கவலையை இந்த பட்டாளி மக்கள் விவகாரம் மீண்டும் பெரிதாக்கி உள்ளது. உள்ளே வெளியே என்று இவர்கள் நடத்தும் நாடகத்திற்கு இந்த மக்கள் எத்தனை நாட்கள் ஏமாறப்போகிறார்கள்.
அரசியல் கட்சிகளின் நலன்கள் என்பது மக்களின் நலனா?. தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக அரசியல் நடத்தும் இந்த கட்சிகள் மக்களுக்காகவே வாழ்பவர்கள் போல எப்படி பாசாங்கு செய்கிறார்கள் பாருங்கள்.
இப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அல்லது வெளியேறியதால் அடுத்து இளிச்சவாய் தமிழர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. ஒருவர் தலையை வெட்டுவேன் என்று சொன்னாராம்… அவர் தலையை வெட்டுவேன் என்றால் என்ன, என் தலையை வெட்டுவேன் என்று சொன்னால் என்ன, எல்லாம் ஒன்று தானே என்று ஒருவர் ஆதங்கப்படுகிறார். தலையை வெட்டுவேன் என்று ஆறு மாதம் முன்னர் தானே சொன்னார், இப்போது சொல்லவில்லையே என்று ஒருவர் சப்பை கொட்டல்.
இந்த கசாப்புக்கடை வியாபாரத்தில் அப்பாவி தமிழ் ஆடுகள் எப்படி தப்பப்போகின்றன.? இந்த சாக்கடைகள் வேண்டாம், புதிதாக தண்ணீர் பாய்ச்சுங்கள் என்றால் அடுத்து காத்திருக்கும் புதிய அரசியல் கட்சிகள் யார் என்று பாருங்கள். வெட்கமய்யா வெட்கம். இந்த குட்டித்தலைவர்களை நினைத்தால் இன்னும் மனம் கலங்குகிறது
தமிழக அரசியல் தரம் தாழ்ந்தது தான். ஆனால் அதன் எதிர்காலம் இன்னும் தாழ்ந்து விடும் என்பதை யாரும் தடுக்க முடியாது போல?
Tuesday, June 17, 2008
கசாப்புக்கடை
Posted by ராஜா வாயிஸ் at 9:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment