கோட்டை விட்ட கருணாநிதி
திமுக அரசாங்கம் இரண்டு முறை ஈழத்தமிழருக்காக தனது ஆட்சியை காவு கொடுத்தது. இந்த தியாகம் பலமுறை அதன் தலைவர்களால் மேடைகளில் முழங்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட இதைப்பற்றி குறிப்பிட்ட கலைஞர் கருணாநிதி இன்னுமொறு முறை இதற்காக ஆட்சியை இழக்கத்தயார் என்று கூறினார்.
கடந்த இரண்டு முறை திமுக இலங்கைப்பிரச்சனையை வைத்து ஆட்சியை இழந்தது அந்த கட்சி விரும்பி செய்தது அல்ல. மாறாக திமுக தலைவர்களின் கூற்றுபடியே பார்த்தால் அந்த டிஸ்மிஸ்கள் அநியாயமானவை. ஆனால் இந்த முறை திமுக தானாகவே முன்வந்து இலங்கை பிரச்சனைக்காக வேண்டி தனது ஆட்சியை தியாகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் கருணாநிதி அதனை பயன்படுத்தாமல் கோட்டை விட்டு விட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்கள் தான் உள்ளது. மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிளிநொச்சி மீது இலங்கை ராணுவம் தாக்குதலை தீவீரப்படுத்தும் முன்னர் கலைஞர் தனது ஆட்சியை இலங்கை தமிழர்களுக்காக தியாகம் செய்ய முன்வந்திருந்தால் அவருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்காது. ஆனால் நசுக்கப்பட்ட இலங்கை தமிழ் இனத்திற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கும்.
இன்றைய சூழ்நிலையில் சோனியா காந்தி திமுகவை விடவே முடியாது. சிலர் சொல்லுவது போல சோனியா காந்திக்கும் இலங்கை தமிழர் விசயத்தில் பலி வாங்கும் எண்ணம் இல்லை. இந்த சூழ்நிலையில் திமுக கொஞ்சம் கண்டிப்பாக நடந்து கொண்டிருந்தால் இன்றைக்கு தமிழர்களின் எதிரிகள் மகிழ்ச்சி அடைவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்காது. மத்திய அரசு இவ்வளவு மெத்தனமாக செயல்பட்டதற்கு முக்கிய காரணம் கருணாநிதியின் மிரட்டல் வெறும் பொழுதுபோக்கு என்று அது எண்ணியது மட்டுமே.
இந்திய வெளியுறவுச் செயலாளர் மேனன் மற்றும் வெளியுறவு மந்திரி பிரனாப் முகர்ஜி ஆகியோரின் கொழும்பு பயணங்கள் இதை இன்னும் உறுதி செய்கின்றன. மேனனும்,பிரனாப்பும் இலங்கை ராணுவத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்ளத்தான் இலங்கை சென்றனர் என்ற சிங்களவர்களின் பேச்சை கருணாநிதி கூட மறுக்க முடியாது. இதில் இந்த இருவரும் கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பின்னர் தான் இலங்கை சென்றனர் என்பது ஒரு கேளிக்கூத்தின் உச்சகட்டம்.
திமுகவின் உள்ள பலருக்கு கலைஞர் இலங்கை பிரச்சனையில் சிறப்பாக செயல்படவில்லை என்ற உணர்வு உள்ளது. வரும் தேர்தலில் அது கட்டாயம் அது பிரதிபலிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வாக்குகளை மனதில் வைத்து மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்சனையில் சில நாடகங்களை போடலாம். ஆனால் அது எந்த அளவு மக்களிடம் எடுபடும் என்பது டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் கைகளில் தான் உள்ளது.
Wednesday, January 28, 2009
[+/-] |
கோட்டை விட்ட கருணாநிதி |
Friday, January 16, 2009
[+/-] |
இந்திய வெளியுறவு செயலாளர் எதற்காக கொழும்பு சென்றுள்ளார்? |
பாவப்பட்ட இலங்கைத்தமிழர்களும் மரத்துப்போய் நிற்கும் இந்திய அரசும்
இன்றைக்கு தினமலர் தலைப்பு செய்தியை படித்த உடன் அந்த பத்திரிகையின் தமிழ் எதிர்ப்பு கோமாளித்தனம் வெளிப்பட்டு நிற்பதுடன் அதனுடன் சேர்த்து இந்திய அரசாங்கம் தமிழர்களை எப்படி முட்டாள்களாக நினைப்பதையும் நிர்வாணமாக காட்டியுள்ளது.
இலங்கை பிரச்சனையில் தொல் திருமாவளவன் இருக்கும் உண்ணாவிரதத்தை நாடகம் போல் சித்தரிக்கும் தினமலர் செய்தி இந்திய வெளியுறவுத்துறை செயலரின் இலங்கை பயணத்தை சிரத்தை மிகுந்த ஒரு பயணம் காட்ட முயன்றாலும் அதில் அடுத்த பத்தியியேலே சாயம் வெளுத்து போய் நிற்கிறது.
இலங்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் போர் நிறுத்தத்திற்கு செல்லவில்லை. அவர் பயணம் முடிந்த அளவு இலங்கையை திருப்திப்படுத்தவே நடக்கிறது என்பதை சொல்லும் தினமலர் இதை நாடகம் என்று சொல்லாமல் திருமாவளவன் உண்ணாவிரதத்தை நாடகம் என்று சொல்லுகிறது என்றால் இப்படிப்பட்ட பத்திரிகைகள் தரம் எப்படி இருக்கிறது.
இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை குறித்து உலகத்ததமிழர்கள் அனைவரும் தூக்கத்தை தொலைத்துக்கொண்டிருக்கும் போது கருணாவின் காட்டிக்கொடுக்கும் பேட்டியை போட்டால் கூட பத்திரிகை சுதந்திரம் என்று சொல்லி சகித்துக்கொள்ளலாம். நாடக பாத்திரங்களை மாற்றி போடுகிறது என்றால் இப்படிப்பட்ட பத்திரிகைகளை தமிழகத்தின் முன்னணி பத்திரிகை என்று சொல்லுவது தமிழர்களுக்கு தான் கேவலம்.
இலங்கை பிரச்சனையில் இந்தியால் என்ன செய்யமுடியும்? ஒன்றும் முடியாது என்பதை விட புலிகள் முற்றிலும் அழிக்கப்படும் வரை இந்தியா ஒன்றுமே செய்யாது என்பது தெரிந்தது. தமிழர்களை கூண்டோடு அழிக்க வெறிகொண்டு அழையும் , தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று சொன்ன இலங்கை தளபதி சரத்தை சிறந்த இராணுவ தலைவர் என்று பாராட்டிய இந்திய வெளியுறவு செயலாளர் எதற்காக கொழும்பு சென்றுள்ளார். சரத்தை நேரில் பாரட்டவா?
இந்த விவகாரத்தில் இலங்கை தமிழர்களை விட பாவப்பட்டவர்களாக தெரிவது பலமின்றி புதுடெல்லியை பார்த்து நிற்கும் தமிழக அரசியல் தலைவர்கள் தான்.